தாய் தாய் தங்கத்தாம்பூலத்தில் வைத்து தலைமேல் கொண்டாடப்பட வேண்டியவள், தாயின் காலுக்கு அடியில் சுவர்க்கம் இருப்பதை திருநபியவர்கள் அருளியிருப்பதே அந்த தாயின் சிறப்பை சொல்கிறது. தாயனவள், தூயவள்ம் தாயை விடச்சிறந்தது இவ்வுலகில் இல்லை என்பர். பள்ளியை அலங்கரிக்கு முன் தாயை பேணிக் காப்பதுமேல் பள்ளிக்குச் செல்லும் முன் தாய்க்கு பணிவிடை செய்து விட்டுச்செல்வது சிறப்பு என்பது சான்றோர் சொல். பெண் தமைக்கையாகிறாள், தாரமாகிறாள், தாயாகிறாள், பாட்டியாகிறாள் உறவுகளால் பல முகம் பெறுகிறாள். அவள் எப்படிப்பட்டவளானாலும் தாய்மை உள்ளத்தோடு இருத்தலே அந்த பெண்மைக்கான பெண்னின் சிறப்பு. கோபம் கொண்ட மனைவி சமைக்காமல் படுத்துவிடுகிறாள்.
கோபம் கொண்ட தாய் சமைத்து விட்டு பசியோடு படுத்துவிடுகிறாள்.
ஒரு பெண் தாயாகவும், தாரமாகவும் இருக்கையிலே மேற்சொன்ன விஷயம் உறுத்தலாம். கோபம் கொண்ட மனைவி தன் பிள்ளைகளுக்கு மட்டும் உணவு ஊட்டிவிட்டு தானும் கோபம் கொண்ட கணவரையும் பசியோடு படுத்துவிடுகிறாள். இப்போ மேலே சொன்ன விஷயம் தெளிவாகிவிட்டல்லவா !? தாயை பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பு பெண் பிள்ளைகளை விட ஆண் மக்களுக்கே பொறுப்புகள் அதிகம் உண்டு. பெண் பிள்ளைகள் தன்னுடைய கணவரின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவள். ஆனுக்கோ எந்த கட்டுப்பாடும் இல்லை நாம் எத்தனையோ ஹாதீஸ்கள் கேட்டிருக்கிறோம் மகனுக்குத்தான் பொறுப்புகள் அதிகம். ஆகையால், நம் தாயை, பிள்ளைகளை பராமரிப்பது போல் கடைவீதிக்கு செல்லும் பொழுதெல்லாம் பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து வாங்கும் தீன் பண்டங்களை தம் தாய்க்கும் வாங்கி கொடுத்து அருகில் அமர்ந்து சாப்பிடக் கொடுத்து பின் சாப்பிட்ட உணவுகள் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஒத்துக் கொள்கிறதா என்பதையும் நாமே கவனிக்க வேண்டும். தாயை வெறுக்கின்ற சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள், அது அவர்களின் துரதிஸ்டம் பிள்ளைகளின் செயல்பாடுகளில் குறை கண்ட தாய் பிள்ளைகளில் வேறுபாடான பரிவை காட்டும் தாயும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது காலத்தின் கோலம். கட்டளையிட்டவனின் கட்டுப் பாட்டை மீறுதல் எது எப்படியோ! தாயிடம் நாம் காட்டும் பரிவு, பற்று, பாசம் எந்த வகையிலும் குறைவு இருக்கக்கூடாது. ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து சொல்கிறார் “நாயகமே தாங்கள் வீட்டில் இல்லாத சமயம் தங்கள் மனைவி வீட்டுக்கு அந்நிய(மதம்)பெண் அடிக்கடி வந்து செல்வதை காண்கிறேன்” என்றார்கள். அதைக்கேட்ட நாயகமோ வீட்டிற்கு சென்றவர்கள் தம் மனைவியவர்களிடம் தாம் கேள்விப்பட்டதை பற்றி கேட்கிறார்கள் அதற்கு அந்த துணைவியாரோ “இனி அந்தப்பெண் இங்கே வரமாட்டார்கள் நான் கடுஞ்சொற்களால் அவர்களை திட்டி அனுப்பிவிட்டேன்” என்கிறார்கள். அதற்கு நாயகமோ(ஸல்) “அதுசரி அந்தப்பெண் யார்?” என வினாவினார்கள். துணைவியவர்கள் சொன்னார்கள் “அது எனது (இஸ்லாத்தை ஏற்காத) தாய்” என்கிறார்கள் உடனே நயகம்(ஸல்) கோபம் கொண்டவராக தன் மனைவியின் இரண்டு புஜங்களையும் தம் கையால் பிடித்து உலுக்கியவாராக “என்ன காரியம் செய்தாய்? அவர்கள், அல்லாஹ்வை ஏற்க்காதவர்களாயினும் உனது தாயல்லவா உடனே அவர்களிடம் சென்று மன்னிப்பு கேள்” என்று அனுப்பி வத்தார்கள். இந்த ஒரு ஹதீஸ் போதுமே நாம் நம் தாயிடம் பரிவை பாசத்தை காட்டுவதற்கு தம் தாயிடம் நேரில் பேசும்பொழுது ஒரு அடிமை தம் எஜமானரிடம் எப்படி பேசுவாரோ அதுபோல் நடந்துகொள்ள வேண்டும் என்பதும் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் கட்டளை. m.s.m.safeer ahamed
1 Responses So Far:
தாய்
தாய் தங்கத்தாம்பூலத்தில் வைத்து தலைமேல் கொண்டாடப்பட வேண்டியவள், தாயின் காலுக்கு அடியில் சுவர்க்கம் இருப்பதை திருநபியவர்கள் அருளியிருப்பதே அந்த தாயின் சிறப்பை சொல்கிறது. தாயனவள், தூயவள்ம் தாயை விடச்சிறந்தது இவ்வுலகில் இல்லை என்பர். பள்ளியை அலங்கரிக்கு முன் தாயை பேணிக் காப்பதுமேல் பள்ளிக்குச் செல்லும் முன் தாய்க்கு பணிவிடை செய்து விட்டுச்செல்வது சிறப்பு என்பது சான்றோர் சொல்.
பெண் தமைக்கையாகிறாள், தாரமாகிறாள், தாயாகிறாள், பாட்டியாகிறாள் உறவுகளால் பல முகம் பெறுகிறாள். அவள் எப்படிப்பட்டவளானாலும் தாய்மை உள்ளத்தோடு இருத்தலே அந்த பெண்மைக்கான பெண்னின் சிறப்பு.
கோபம் கொண்ட மனைவி சமைக்காமல் படுத்துவிடுகிறாள்.
கோபம் கொண்ட தாய் சமைத்து விட்டு பசியோடு படுத்துவிடுகிறாள்.
ஒரு பெண் தாயாகவும், தாரமாகவும் இருக்கையிலே மேற்சொன்ன விஷயம் உறுத்தலாம். கோபம் கொண்ட மனைவி தன் பிள்ளைகளுக்கு மட்டும் உணவு ஊட்டிவிட்டு தானும் கோபம் கொண்ட கணவரையும் பசியோடு படுத்துவிடுகிறாள். இப்போ மேலே சொன்ன விஷயம் தெளிவாகிவிட்டல்லவா !?
தாயை பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பு பெண் பிள்ளைகளை விட ஆண் மக்களுக்கே பொறுப்புகள் அதிகம் உண்டு. பெண் பிள்ளைகள் தன்னுடைய கணவரின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவள். ஆனுக்கோ எந்த கட்டுப்பாடும் இல்லை நாம் எத்தனையோ ஹாதீஸ்கள் கேட்டிருக்கிறோம் மகனுக்குத்தான் பொறுப்புகள் அதிகம். ஆகையால், நம் தாயை, பிள்ளைகளை பராமரிப்பது போல் கடைவீதிக்கு செல்லும் பொழுதெல்லாம் பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து வாங்கும் தீன் பண்டங்களை தம் தாய்க்கும் வாங்கி கொடுத்து அருகில் அமர்ந்து சாப்பிடக் கொடுத்து பின் சாப்பிட்ட உணவுகள் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஒத்துக் கொள்கிறதா என்பதையும் நாமே கவனிக்க வேண்டும்.
தாயை வெறுக்கின்ற சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள், அது அவர்களின் துரதிஸ்டம் பிள்ளைகளின் செயல்பாடுகளில் குறை கண்ட தாய் பிள்ளைகளில் வேறுபாடான பரிவை காட்டும் தாயும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது காலத்தின் கோலம். கட்டளையிட்டவனின் கட்டுப் பாட்டை மீறுதல் எது எப்படியோ! தாயிடம் நாம் காட்டும் பரிவு, பற்று, பாசம் எந்த வகையிலும் குறைவு இருக்கக்கூடாது.
ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து சொல்கிறார் “நாயகமே தாங்கள் வீட்டில் இல்லாத சமயம் தங்கள் மனைவி வீட்டுக்கு அந்நிய(மதம்)பெண் அடிக்கடி வந்து செல்வதை காண்கிறேன்” என்றார்கள். அதைக்கேட்ட நாயகமோ வீட்டிற்கு சென்றவர்கள் தம் மனைவியவர்களிடம் தாம் கேள்விப்பட்டதை பற்றி கேட்கிறார்கள் அதற்கு அந்த துணைவியாரோ “இனி அந்தப்பெண் இங்கே வரமாட்டார்கள் நான் கடுஞ்சொற்களால் அவர்களை திட்டி அனுப்பிவிட்டேன்” என்கிறார்கள். அதற்கு நாயகமோ(ஸல்) “அதுசரி அந்தப்பெண் யார்?” என வினாவினார்கள்.
துணைவியவர்கள் சொன்னார்கள் “அது எனது (இஸ்லாத்தை ஏற்காத) தாய்” என்கிறார்கள் உடனே நயகம்(ஸல்) கோபம் கொண்டவராக தன் மனைவியின் இரண்டு புஜங்களையும் தம் கையால் பிடித்து உலுக்கியவாராக “என்ன காரியம் செய்தாய்? அவர்கள், அல்லாஹ்வை ஏற்க்காதவர்களாயினும் உனது தாயல்லவா உடனே அவர்களிடம் சென்று மன்னிப்பு கேள்” என்று அனுப்பி வத்தார்கள்.
இந்த ஒரு ஹதீஸ் போதுமே நாம் நம் தாயிடம் பரிவை பாசத்தை காட்டுவதற்கு தம் தாயிடம் நேரில் பேசும்பொழுது ஒரு அடிமை தம் எஜமானரிடம் எப்படி பேசுவாரோ அதுபோல் நடந்துகொள்ள வேண்டும் என்பதும் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் கட்டளை.
m.s.m.safeer ahamed